ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் மின் கசிவினால் தீ விபத்து!

85பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த துணை மின் நிலையத்திலிருந்து ஆதனக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணை மின் நிலையத்தில் உள்ள ஆயிரம் மெகாவாட் கொண்ட மின்மாற்றியில் ஆயில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி எறிந்து புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதைக் கண்ட மின்சார வாரிய பணியாளர்கள் உடனே கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து பற்றி எரிந்த மின்மாற்றியை நீரினைக் கொண்டு பீச்சி அடித்து இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயினை போராடி அனைத்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் துணை மின் நிலையத்தில் மின்மாற்றில் ஆயில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்து புகை மூட்டமாக காட்சியளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி