சிறுமிக்கு நேர்ந்த துயரம்...

73பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி நால்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீராபாய் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார், பின்னர் அவரை ஆலங்குடி பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி