10 நாட்களில் 1000 கழிப்பறை திட்டம் - ஆட்சியர் உறுதி

55பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை கிராமத்தில் " 10 நாட்களில் 1000 கழிப்பறைகள்" என்ற சிறப்பு முனைப்பியக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று (22.08.2024) தொடங்கி வைத்தார்.

அப்போது கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களில் கழிப்பறை வசதி இல்லாத வீடுகள் இன்றும் இருந்து வருகிறது மேலும் பொது வழியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் நோய் தொற்று உபாதைகளையும் எடுத்துரைத்து கட்டாயம் கழிவறைகள் உபயோகிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், அரசுத் துறை அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி