ரயிலில் கடத்தப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல்

61பார்த்தது
ரயிலில் கடத்தப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல்
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் மாநகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ரயிலில் வைத்து போதைப் பொருட்கள் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, 50 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதனை கொண்டு வந்த பத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்களையும் கைது செய்தனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி