பிரதமர் மோடி வருகை - திருச்சியில் பலத்த பாதுகாப்பு!

573பார்த்தது
பிரதமர் மோடி வருகை - திருச்சியில் பலத்த பாதுகாப்பு!
திருச்சியில் ரூ.19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். திருச்சி விமான நிலையத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்குகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி, திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி