பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனை,
நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த
திமுக மாவட்ட நிர்வாகிகள்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில், ஜனவரி 2ஆம் தேதி,
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண் மற்றும்,. ஆலத்தூர் மேற்கு ஒன்றிய
திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், மற்றும் சக்தி உள்ளிட்ட பலர்
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனை
நேரில் சந்தித்து, சால்வே அணிவித்து மரியாதை செய்து தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் அதற்கான பணிகளில் நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு, திமுகவில் வெற்றி பெற கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது
திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.