உதகை குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்!

71பார்த்தது
உதகை குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்!
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டுள்ளது. குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்துள்ளது. இதுகுறித்த வழக்கில் 2019ல் குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டது. இந்நிலையில் உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் மைதானத்தை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி