வர்ணஜாலம் காட்டிய இரண்டு வானவில்; பார்த்து ரசித்த மக்கள்

71பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை, கன மழை பெய்து வருகிறது இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை மிதமாக பெய்யும் முன்பு வானில் வானவில் தோன்றுவது வழக்கமான ஒன்று.

அந்தவகையில், நேற்று (ஜூன் 8) மாலை கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதியில் வானில் இரட்டை வானவில் தோன்றியது. இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்ததுடன் தங்களது செல்போன்களில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி