சின்டெக்ஸ் கம்பெனியில் பணிபுரியும் AITUC தொழிற்சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் 9 பேரை எந்தவித முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏனைய தொழிலாளர்களும்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் துணைத் தலைவர் செங்கோட்டையன் செயலாளர் ராஜா பொருளாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.