ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் சிறப்பு வழிபாடு

52பார்த்தது
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் சிறப்பு வழிபாடு
ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, இளநீா் , பன்னீா் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் மணி, ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தொடர்புடைய செய்தி