ஆடி முதல் நாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

76பார்த்தது
ஆடி முதல் நாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் நாளையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


ஆடி முதல் நாள் மற்றும் ஆஷாட சுத்த சயன ஏகாதசி மகோற்சவ  நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதனையொட்டி நேற்றுமுன்தினம் கொடியேற்று விழா நடந்தது. நேற்று காலை மற்றும் மாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் மற்றும் சிறப்பு பஜனைகள் நடந்தன. இன்று காலை காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், கருட தரிசனம், நடைபெறவுள்ளன.
அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,  அலங்கார,  ஆராதனை நடந்தது. இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில்,  சேலம் சாலை,  ராஜா வீதி  சவுண்டம்மன் கோவில்கள்,  அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள்,  மாரியம்மன் கோவில்கள்,  திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில்,  வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில்,   நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில்,  அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில்,  பட்டத்தரசியம்மன் கோவில்,  தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள்கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன்,  காளியம்மன் கோவில்,  பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேக,  அலங்கார,  ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி