தாய் ஒன்றரை வயது மகன் மாயம்

54பார்த்தது
குமாரபாளையத்தில் தாய் ஒன்றரை வயது மகன் மாயமானார்கள்.

 

 

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவில் பகுதியயை சேர்ந்தவர் கதிர்வேல், 30, தனியார் நிறுவன டைலர். இவரது மனைவி தீனா, 23. இவர்களுக்கு ஒன்றரை வயதில் முகுந்தன், என்ற மகன் உள்ளார். தீனா, மார்ச் 29ல் தன் அம்மா ஊரான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, வாட்டாக்குடி என்ற ஊருக்கு செல்வதாக கூறி குழந்தையுடன் சென்றார். மறுநாள் போன் செய்து கேட்ட போது, அம்மா வீட்டில் இருபதாக தீனா கூறினார். ஏப். 13ல் தீனாவிற்கு, கதிர்வேல் போன் செய்த போது, போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. தன் மாமியாருக்கு  போன் செய்து கேட்ட போது, இங்கு வரவில்லை என்றார். மனைவி, குழந்தை இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.