மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருவாரூர் ரயில்வே லைனை அனைத்து நடைமேடையுடன் இணைப்பதற்காக 23 கோடி நிதியானது மாவட்ட நிர்வாகத்திடம் ரயில்வே துறை வழங்கியுள்ளது. தொடர்ந்து நிலமானது ரயில்வேயிடம் வழங்காமல் நிலுவையில் உள்ளதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரைந்து துவங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரயில் பயணிகள் மனு அளித்தனர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.