மயிலாடுதுறையில் பாராளுமன்ற தேர்தலின் போது தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்ய மயிலாடுதுறை மாவட்ட அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களை அழைத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு தடையற்ற தகவல் தொடர்பை வழங்குவதாக உறுதி அளித்தனர்.