மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் உள்ளது பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன மடத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள சமயபுரம் யானை நேற்று வேத சிவகாம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தலையை ஆட்டி நடன ஆற்றிய நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து தலையை ஆட்டியவாறு அழகாக யானை நடந்து சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. யானையின் இந்த செயலை அங்கிருந்து அனைவரும் வீடியோ எடுத்து ரசித்து மகிழ்ந்தனர்.