வைகையாற்று பகுதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

2962பார்த்தது
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருவிழாவினை முன்னிட்டு மதுரை மாநகரே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், நாள்தோறும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

சித்திரைத் திருவிழாவின் மைய நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்ச்சி ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 5. 51 மணியிலிருந்து 6. 10 மணிக்குள் நடைபெறும். இதில் மதுரையின் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மட்டுமன்றி தென்மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆழ்வார்புரம், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே வைகையாற்றில் எழுந்தருள்வார் என்பதால், அவ்விடத்தை மதுரை மாநகராட்சி கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்து வருகிறது. கள்ளழகர் இறங்கக்கூடிய தண்ணீர்த் தொட்டியும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. செம்மண், சரளைக்கற்கள் கொட்டப்பட்டு ஜேசிபி மூலமாக அவ்விடம் சமதளமாக்கப்பட்டு வருகிறது. தற்போது வைகையாற்றில் தண்ணீர் குறைவாக உள்ள காரணத்தால், இதற்காக வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி