தேமுதிக நிர்வாகி மறைவுக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் மகன்

55பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் மறைந்த தேமுதிகவின் நிர்வாகி வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய விஜய பிரபாகரன் நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேல பச்சேரி பகுதி 99 வது வார்டு தேமுதிக வட்ட துணைச் செயலாளர் முனியாண்டி கடந்த 2ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்தார்.

இதை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மறைந்த துணை செயலாளர் முனியாண்டியின்
வீட்டுக்கு இன்று காலை நேரில் வந்து அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு முனியாண்டியின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறி நிதி வழங்கினார்.

இவருடன் மாவட்ட செயலாளர் கணபதி வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி