நீர், மோர் பந்தல் திறப்பு

530பார்த்தது
நீர், மோர் பந்தல் திறப்பு

மதுரையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்களின் தாகம் தீர்க்க மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்பாட்டில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கும் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் பழச்சாறுகள் இளநீர் ரோஸ் மி்ல்க் உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்களை செல்லூர் ராஜு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் எம். எஸ். பாண்டியன் அண்ணாதுரை வில்லாபுரம் ராஜா எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஜெயபால் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக பங்கேற்றனர்.