பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலி

82பார்த்தது
பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலி
மதுரையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.


மதுரை தெப்பக்குளம் ஞானவேல் குடியிருப்பு பவுன்மணி தெருவைச் சோ்ந்தவா் பூமிநாதன் (60). இவா் செவ்வாய்க்கிழமை இரவு விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த பூமிநாதனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா், அரசுப்பேருந்து ஓட்டுநா் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த புஷ்பராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :