காதல் விவகாரம்: இளைஞரின் தாய்க்கு அடி உதை

549பார்த்தது
கர்நாடக மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் உள்ள அரேமல்லபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது. தற்போது இதுகுறித்து வீடியோ வெளியாகியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீஸ் விசாரிக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி