சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது

53பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்ற இரண்டு பேர் கைது
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பி. உடையப்பட்டி மற்றும் காவல்காரன்பட்டி ஆகிய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் மது விற்ற கல்லடையைச் சேர்ந்த ராஜ்குமார் (46), புதுக்கோட்டையைச் சேர்ந்த சொர்ணாசேகர் (36) ஆகிய 2 பேரை பிடித்த தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி