செல்போன் கேட்டு இளைஞரை தாக்கிய சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

63பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் கரூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மெயின்டனன்ஸ் பிட்டர் வேலை பார்த்து வருகின்றார். வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இன்று இரவு குளித்தலை பேருந்து நிலையத்தில் சத்தியமங்கலம் பேருந்தில் செல்ல வேண்டி நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 4 இளைஞர்கள் சதீஷ்குமாரிடம் செல்போன் பேசிவிட்டு தருவதாக கூறியுள்ளனர். செல்போனை வாங்கி பேசிய இளைஞர் சிறிது நேரம் கழித்து செல்போனை தர மறுத்துள்ளார். அவரிடம் இருந்து தனது செல்லை பிடுங்கிய சதீஷை 4 இளைஞர்கள் அடித்து காயப்படுத்தி உள்ளனர். அவர் அணிந்திருந்த கண்ணாடியை குத்தியதில் வலது கண்ணில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.

குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 30 நாட்களில் இதே போல் குளித்தலை நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி குற்றங்கள் அதிகமாகி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி