திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா சுண்டக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (37). இவர் நேற்று குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியில் தனது உறவினர் வீட்டின் வாசலில் தனது பைக்கை நிறுத்தி உள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த ரூ. 50000 மதிப்புள்ள பைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் பால்ராஜ் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.