மணிப்பூரில் கலவரம் - பெண்கள் குழந்தைகள் வெளியேற்றம்

59பார்த்தது
மணிப்பூரில் கலவரம் - பெண்கள் குழந்தைகள் வெளியேற்றம்
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் இன்று (ஏப்ரல் 28)) காங்போக்பி மாவட்டத்தில் இம்பால் பள்ளத்தாக்கின் மலைப்பகுதியில் உள்ள கவுட்ரூர் கிராமத்தில ஆயுதம் தாங்கிய இரண்டு குழுக்கள் கண்மூடித்தனமாக ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டனர். இதில் சில குண்டுகள் கிராமவாசிகளின் வீட்டுச் சுவர்களை துளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி