கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடலெட்சுமி (87). இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சமையல் அறையில் வெங்கடலெட்சுமி மயங்கி கிடந்துள்ளார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரின் மகன் கணேசன் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.