கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம். மகளை காணவில்லை தந்தை புகார்.

76பார்த்தது
கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம். மகளை காணவில்லை தந்தை புகார்.
கல்லூரிக்குச் சென்ற மாணவி மாயம். மகளைக் காணவில்லை தந்தை புகார்.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் மகள் கீர்த்தனா வயது 19.

இவர் புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில்
பி காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில்,
வழக்கம் போல் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற கீர்த்தனா மாலையில் வழக்கம் போல் வீடு திரும்பவில்லை.

இதனால் தனது மகளைக் காணாது தவித்த சிவகுமார், கீர்த்தனாவின் சக தோழியரிடத்தில் விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

பிறகு தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்று விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால், இது குறித்து காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து மாயமான கீர்த்தனாவை தேடி வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி