டூவீலர் மீது லாரி மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.

80பார்த்தது
பொன்னியா கவுண்டன் புதூரில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, வேட்டை மங்கலம் அருகே உள்ள அதியமான் கோட்டை, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் வயது 35. அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் வயது 38.

இவர்கள் இருவரும் ஜூலை 7ம் தேதி அதிகாலை 5: 15- மணியளவில், வேலாயுதம்பாளையத்திலிருந்து புன்னம்சத்திரம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் பொன்னியா கவுண்டன் புதூர், பெரியசாமி வீடு அருகே சென்ற போது,

அரியலூர் மாவட்டம், தென்னவநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, விஜயகுமார் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த விஜயகுமார்
சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் அறிந்த விஜயகுமாரின் மனைவி தனலட்சுமி வயது 26 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த விஜயகுமார் உடலை உடற் கூறாய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி