40 தொகுதிகளிலும் வெற்றி - விஜய்வசந்த் அதிரடி பேட்டி

2949பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் தற்போதைய கன்னியாகுமரி எம்பியுமான விஜய்வசந்த் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய்வசந்த் எம்பி கூறுகையில்,

திராவிட மாடல் அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என கூறும் மத்திய அரசான பாஜக தமிழகத்தில் வெள்ளபாதிப்பின்போது எதுவுமே செய்யாமல் வெள்ளநிவாரண நிதி கோரிக்கையை கூட நிராகரித்து. ஏதோ சாக்குபோக்கு கூறியதுடன் தமிழக மக்களின் மீது அக்கரையே இல்லாமல் இருந்துவிட்டு தேர்தலின் போது வாக்குகளுக்காக மட்டுமே மக்களை சந்திக்க வருகிறார்கள். மோடி தமிழ்கத்திற்கு 6 முறை வந்தால் ஏதோ தமிழகத்தில் மாற்றம் கிடைக்கும் என நம்புகிறார்கள். அது அவர்களுக்கு ஏமாற்றமாக தான் அமையும்.

அதிமுக பழனிசாமி 35 இடங்களில் வெற்றிபெறும் என கூறியது குறித்து பேசிய விஜய்வசந்த், ஒவ்வொரு கட்சிக்குமா வெற்றி ஆசை இருக்கதான் செய்யும். அது வெறும் ஆசையாக தான் இருக்கும் தமிழகத்தில் திராவிட மாடல் இந்தியா கூட்டணி 40 இடங்களையும் கைபற்றி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.