கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மணிமேடை வேப்பங்குடி கோட்டாறு பறக்கை ரோடு வழியாக பைப்லைன் அமைக்கப்பட்டு வருகிறது. மணிமேடை வேப்பங்குடி இடையே பைப்லைன் அமைக்கப்பட்ட பகுதியில் குடிநீர் குழாயில் சேதம் ஏற்பட்டு தண்ணீர் நேற்று ரோட்டில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பணியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளானர்.