நாகர்கோவில்: டெம்போவில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு.

61பார்த்தது
நாகர்கோவில்: டெம்போவில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு.
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48), டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடையடிப்பர் வசதி கொண்ட டெம்போவை ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7. 30 மணி அளவில் தளவாய்புரம் சவரி முத்து காம்பவுண்டுக்கு டெம் போவில் மணல் ஏற்றி வந்தார். அங்கு மணலை கொட்டுவ தற்காக டெம்போவின் டிப்பரை தூக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக டெம்போவில் அந்த வழியாக மேலே சென்ற மின்கம்பி உரசியது. இதனால் டெம்போவில் மின்சா ரம்பாய்ந்து அதை இயக்கிய பாஸ்கரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பாஸ் கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி