கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் காந்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் சுகாதார நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்.