குமரி: பள்ளி மாணவனிடம் நகை பறித்த மீனவர் கைது

3339பார்த்தது
கீழ மணக்குடி கிறிஸ்டியன் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- படித்து வருகிறார். இந்த மாணவன் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள நண்பர்களை சந்திக்க வந்தார். பின்னர் இரவு வீட்டுக்கு செல்வதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது பிள்ளயைார் தோப்பு மேலத்துறையை சேர்ந்த மீனவர் அருள் ஆன்றோ ஷாஜின் (வயது37) மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் சிறுவனிடம் ‘உனது வீட்டின் அருகே தான் செல்கிறேன், என்னுடன் மோட்டார் சைக்கிளில் வா' என கூறினார். உடனே சிறுவனும் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

அவர்கள் ஒழுகினசேரி ஆராட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அருள் ஆன்றோ ஷாஜின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறுவனை கீழே இறக்கிவிட்டார். தொடர்ந்து அவர் அணிந்திருந்த 1 3/4 பவுன் தங்க சங்கிலி மற்றும் கிராம் மோதிரத்தையும் மிரட்டி பறித்து விட்டு சென்றார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் ஆன்றோ ஷாஜினை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி