அ. தி. மு. க. வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட வாகன பேரணி.

54பார்த்தது
அதி. மு. க வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவில் வடசேரி எம்ஜி. ஆர். சிலையில் இருந்து மணிமேடை வரை பிரமாண்ட வாகன பேரணி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம். எல். ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் திறந்த வாகனத்தில் தளவாய் சுந்தரம் எம். எல். ஏ. , முன்னாள் எம். பி. நாஞ்சில் வின்சென்ட், அமைப்பு செய லாளர் கேடி பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், வேட்பாளர்கள் பசிலியான் நசரேத், ராணி ஆகியோர் நின்றபடி வாக்கு சேகரித்தனர். இந்த பேரணி யின் போது வழிநெடுகிலும் வேட்பாளர்கள் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மணிமேடை சந்திப்பில் தளவாய்சுந்தரம் எம். எல். ஏ. பேசுகையில், இந்த பேரணி வெற்றி பேரணி, இரட்டை இலைக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி தி. மு. க. வினர் ஆட்சியில் அமர்ந்தனர். 2026-ம் ஆண்டு தேர்தலிலும் அ. தி. மு. க. ஆட்சி அமையும் என்றார். இதில் முன்னாள் எம். எல். ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், துணை செயலாளர் சுகுமாரன், கலை இலக்கிய பேரவை துணை செயலாளர் சந்துரு, ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், முத்துகுமார், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன், ஸ்ரீலிஜா, இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷயா கண்ணன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி