இரணியல்: பைக்குகளை திருடிய 3 வாலிபர்கள் கைது

2243பார்த்தது
இரணியல்: பைக்குகளை திருடிய 3 வாலிபர்கள் கைது
இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை மணக்கரை அருகே புதிய நான்கு வழிச்சாலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக ஒரே பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் அந்த இளைஞர்கள் திருவட்டார் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் விஜின் (எ) குட்டன் (26) ஆற்றூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் அஜித்(19) அதே பகுதியை சேர்ந்த ராஜகுமார் மகன் ரஞ்சித் (19) என்பதும் தெரியவந்தது

அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கடந்த 22-ம் தேதி இரவு சுங்கான்கடை பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் லூக்காஸ் என்பவர்களின் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த இரு பைக்குகளையும் அதே இரவு கருங்கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கையும் திருடி சென்றது தெரியவந்தது

இதனையடுத்து அவர்கள் திருடி விற்பனை செய்த மூன்று பைக்குகளையும் பறிமுதல் செய்த இரணியல் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.