கருங்கல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை

83பார்த்தது
கருங்கல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
கருங்கல் அருகே பாலப்பள்ளம் குற்றித்தாணி பகுதியை சேர்ந்தவர் நிஷா (39). பட்டதாரியான  இவர் கடந்த 19 -11- 2009 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜான் எந்த ஜஸ்டின் (47) நிஷாவிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
       இதனை நிஷா வீட்டில் உள்ளவர்களிடமும் அப்பகுதி வார்டு உறுப்பினரிடம் கூறியுள்ளார்.  
    இந்த நிலையில் ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி மற்றும் சகோதரி சேர்ந்து நிஷாவுக்கு மிரட்டல் விடுத்து,   தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதனை அடுத்து நிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
      இது தொடர்பாக நிஷா கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி கிரிஜா (42) சகோதரி தங்கம் (45) ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

      இது தொடர்பான வழக்கு விசாரணை இரணியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி அமர்தின், ஜஸ்டினுக்கு மூன்று வருட சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், மனைவி கிரிஜாவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், சகோதரி தங்கத்தை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி