சுசீந்திரம் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 67 ஆயிரம் வசூல்

564பார்த்தது
சுசீந்திரம் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 67 ஆயிரம் வசூல்
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மதிய வேளையில் வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் அன்னதான உண்டியல் ஒன்றையும் திருக்கோவில் நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த அன்னதான உண் டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அதுபோல் நேற்றும் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது திருக்கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில், ஆய்வர் ராமலட்சுமி, கணக் கர் கண்ணன் ஆகியோர் மேற் பார்வையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ. 67 ஆயிரத்து 167 கிடைத்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி