குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

563பார்த்தது
குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.
தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேரூர் நியாயவிலை கடையின் கீழ் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணத்தொகை வழங்குவதை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், இ. ஆ. ப. , நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17. 12. 2023 மற்றும் 18. 12. 2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட  அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5, 77, 803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொனை கடந்த 29. 12. 2023 அன்று முதல் அனைத்து  கூட்டுறவு  கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03. 01. 2024)ம் வழங்கப்படும். எனவே விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில்  உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி