செங்கல்பட்டில் உணவகத்திற்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்

571பார்த்தது
உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கிழ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்க்கொண்டார். உணவகம் நடத்த முறையாக அனுமதி பெற்றுள்ளனனாரா என சான்றிதழ்களை பார்வையிட்டார் உணவகத்தில் இருந்த சமையல் அறை, குடோன், குடிநீர், உணவு பொருட்களையும் ஆய்வு மேற்கொண்டார் இதனை தொடர்ந்து குளிர்சாதனப்பெட்டியில் இருந்த குளிர்பானங்களை, என அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சமையல் சுத்தமாக இல்லை ஏன் என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த உணவகத்திற்க்கு அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டார் ஆட்சியர் உத்தரவின் படி உணவு பாதுகாப்புதுறை அதிகாரி அனுராதா உணவகத்திற்க்கு 1000 ரூபாய் விதித்து நோட்டீஸ் வழங்கினார். மேலும் ஏழு நாட்களுக்கு உணவகத்தை சுத்தமாக வைத்து புகைபடங்களை ஆட்சியரிடம் நேரில் சமர்பிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி