சரக்கு வாகன பேட்டரி திருடிய மூவர் கைது

83பார்த்தது
சரக்கு வாகன பேட்டரி திருடிய மூவர் கைது
செங்கல்பட்டு அடுத்த பாலுார், ரெட்டிப்பாளையம், கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் லாரி, கார், டாடா ஏஸ் சரக்கு வாகனங்களில் பேட்டரி திருட்டு நடைபெறுவதாக, பாலுார் போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து, ரெட்டிப்பாளையம் பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ரெட்டிப்பாளையம் - பாலுார் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வாகனம் அருகில், சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த மூவரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், மூவரும் ரெட்டிப்பாளையம் பகுதி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த விக்னேஷ், 33, வினித்குமார், 25, காமேஷ், 22, என்பது தெரியவந்தது.

மூவரும், பகலில் செங்கல் சூளையில் வேலைபார்த்துக்கொண்டு, இரவில் வாகனங்களில் பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மூவரையும் பாலுார் போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
Job Suitcase

Jobs near you