தாம்பரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

1518பார்த்தது
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்களவைத் தேர்தலுக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் தொடர்ந்து சனி ஞாயிறு ஆகிய தினங்கள் விடுமுறை என்பதால் நேற்று மாலை இருந்து சென்னை நோக்கி வர தொடங்கினர்.

இதனால் நேற்று மாலை முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி மற்றும் பரனூர் சுங்கச்சாவடி சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, மகேந்திரா சிட்டி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த கார் மூலம் மற்றும் அரசு சிறப்பு பேருந்து மூலமாகவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கி பயணிகள் அங்கிருந்து மாநகர பேருந்து மூலமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால் ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னை வந்த பொதுமக்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது. இதனால் அரசு மாநகர பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும் சிறப்பு பேருந்து மூலமும் சென்னை வந்தவர்கள் பேருந்து இல்லாமல் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அவதி அடைந்து வருகிறார்கள்.