உடைந்த மின்கம்பத்தினை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை

72பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிவாக்கத்தில் இருந்து தர்காஸ் செல்லும் சாலை அருகே தேவி நகர் பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் அந்த சாலை வழியாக வந்த ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த மின்சார கம்பத்தின் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் மின்சார கம்பம் இரண்டாக உடைந்தது.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.

ஆனால் உடைந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்கம்பத்தை இதுவரை மாற்றாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் காலை 7 மணியிலிருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல மின்வாரிய அதிகாரிகள் அலட்சிய செயல்படுகின்றனர். என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you