மூன்று லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

539பார்த்தது
மூன்று லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தந்த நடிகர் KPY பாலா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கோட்டை கயப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் கடந்த சில வருடங்களாக சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் பலருக்கு உடல் உபாதைகள் மற்றும் உயிரிழப்புகளும் உள்ளது என இந்த கிராம மக்கள் பல்வேறு உதவிகள் செய்து வரும் நடிகர் KPY பாலா அவர்களிடம் தங்கள் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஒன்றை அமைத்திருமாறு கோரிக்கை ஒன்றை கடந்த மாதம் டிசம்பர் 17ஆம் தேதி மனுவாக பொதுமக்களின் கையெழுத்துடன் கூடிய மனுவாக கொடுத்தனர் அவர் அந்த மனுவை பெற்றுக் கொண்டு குறுகிய நாட்களில் மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து இந்த கிராம மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துக் கொடுத்தார் இதனை இன்று அவர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அமுதவாணன் ஆகிய இருவரும் இணைந்து திறந்து வைத்தனர் கிராம மக்கள் அனைவரும் நெஞ்சார நன்றியை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி