பைக் வாங்கி தராததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

2293பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன் இவரது மகன் சுகந்தன் வயது (23) உடல்நல குறைவு காரணமாக தீனதயாளன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில், சுகந்தன் அவரது தாய் அரவணைப்பின் வளர்ந்து வந்துள்ளார். சுகந்தன் அவரது தாயிடம் எனக்கு பைக் வாங்கி கொடுங்கள் இல்லை என்றால் வேலைக்கு போக மாட்டேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரது தாய் என்னிடம் பணம் இல்லை நீயே வேலைக்கு போய் வாங்கிக்கொள் என கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுகந்தன் வீட்டில் அவரது அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுகந்தன் தூக்கில் தொங்கி நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்பு அக்கம் பக்கத்தினர் மறைமலைநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.