முன்விரோத தகராறு: 5 பேர் மீது வழக்கு

79பார்த்தது
முன்விரோத தகராறு: 5 பேர் மீது வழக்கு
சின்னசேலம் அருகே முன் விரோதத்தால் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சின்னசேலத்தை சேர்ந்தவர் பூபதி மகன் சதீஷ்குமார், 21; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செம்மலை என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த ஏப். 21ம் தேதி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இது தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகம் மகன் செம்மலை, செம்மலை மனைவி விஜயா ஆகியோர் மீதும், அதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த விஜயா புகாரின் பேரில், பூபதி மகன் சதீஷ்குமார், அம்பாயிரம் மகன் பூபதி, தண்டபாணி ஆகிய 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி