கள்ளக்குறிச்சி மாவட்ட வி. சி. , சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மதியழகன், பழனியம்மாள், அறிவுக்கரசு தலைமை தாங்கினார். இதில், மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, முற்போக்கு மாணவரணி மாநில நிர்வாகி நெப்போலியன் ஆகியோர் பேசினர். லோக்சபா தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்தவேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்ததை தீவிர பேரிடராக அறிவித்து 21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.