நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சமய் சிங் மீனா உத்தரவுப்படி கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது திருப்பதி பகுதியில் உள்ள மகாகனி ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 06 பேரலில் சுமார் 1, 200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.