மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவி தொகை வழங்கிய ஆட்சியர்

73பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் ஒன் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி கனிமொழி என்பவருக்கு முதன்மை தேர்வு எழுத 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி