9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

91973பார்த்தது
9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்களின் நலன் கருதி சென்னை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.