மகிழ்ச்சி செய்தி: விடுமுறை அறிவிப்பு

50பார்த்தது
மகிழ்ச்சி செய்தி: விடுமுறை அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் முக்கிய நாளான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நாளை (14 ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 23ம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி