'தங்கமான மனசுக்காரர் கேப்டன்' - ஓவியம் தீட்டிய கலைஞர்!

1073பார்த்தது
கள்ளக்குறிச்சி: சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம், கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக "தங்க மனசுக்காரர் கேப்டன்" என குறிப்பிட்டு அவரது உருவத்தை தங்கக் காசு கொண்டு வரைந்து அஞ்சலி செலுத்தினார். ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில், நல்ல மனிதர், அனைவராலும் விரும்பப்படக்கூடியவர், தங்க மனசுக்காரர் அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. கேப்டனின் மறைவுக்கு செலுத்தும் விதமாக தங்க மனசுக்காரரின் உருவத்தை இரண்டு பவுன் மதிப்பு உள்ள தங்க காசை நீர் வண்ணத்தில் தொட்டு "தங்கத்தாலேயே" தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்துள்ளேன் என கூறினார்.

தொடர்புடைய செய்தி